எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த பணி: மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு வருகிற 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை எழும்பூர் மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வார்டு மேனேஜர் பணியில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. மேலும், தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதிசான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், ‘இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும், அரசு தாய் சேய் நல மருத்துவமனை எழும்பூர் சென்னை -600008’ என்ற இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 26ம் தேதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது சக மனிதனை பாகுபாடுடன் பார்ப்பது ஏற்புடையது அல்ல: ஐகோர்ட் கிளை கருத்து

‘சர்வதேச அனுமதி கிடைக்கவில்லை’ நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: நாளை மறுநாள் தொடங்கும் என நிர்வாகம் அறிவிப்பு

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கு முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு