இங்கிலாந்து சட்டப்படி திறந்தவெளி நீர்நிலைகளில் உரிமையாளர் குறியீடு இல்லாத எல்லா அன்னங்களும் அரியணைக்கு சொந்தமானது என சட்டம் இருப்பதால், இங்கிலாந்து அரசர் சார்ல்ஸுக்கு மரியாதை செலுத்திய அவர்கள், துடுக்கால் இயக்கப்படும் சிறிய படகில் பயணித்து அன்ன பறவைகளை கணக்கெடுத்தனர். 5 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் ஆற்றில் 127 கிமீ பயணம் செய்து அன்னப்பறவைகளை கணக்கெடுக்க உள்ளனர். அரச குடும்பங்களுக்கு விருந்துகளுக்கு தேவையான அன்ன பறவை கிடைப்பது தடைபடாது இருக்கவே இந்த ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது அன்னங்கள் உண்ணப்படுவதில்லை என்றாலும் பாரமபரிய அன்னம் எண்ணும் நிகழ்வு நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது.