கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்

ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் மே மாதம் 31ம் தேதி வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆண்டுதோறும் கோடை சீசனின் போது போக்குவரத்தில் மாற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஊட்டி – குன்னூர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ குன்னூர்‌ வழியாக ஊட்டி வரலாம். அதேசமயம், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம்‌ செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இது இம்மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும், கூடலூரிலிருந்து ஊட்டி வரும்‌ அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள்‌, வேன்‌ மற்றும்‌ மேக்சிகேப்‌ வாகனங்களும்‌ எச்‌பிஎப்‌., கோல்ப் லிங்ஸ் ‌சாலை பகுதியில்‌ நிறுத்தப்படும். அந்த வாகனங்களில் வரும்‌ சுற்றுலா பயணிகள்‌ போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் சுற்று பேருந்தை பயன்‌படுத்தி ஊட்டி நகருக்குள் வரலாம்.

அதேபோல், மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும்‌ இலகு ரக வாகனங்கள் (கார்கள், ஜீப்புகள்)‌ தலைகுந்தா‌, கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டிபன் சர்ச்‌ வந்தடையும்‌. அங்கிருந்து தாவரவியல்‌ பூங்கா செல்லும்‌ சுற்றுலா பயணிகள்‌ புதுமந்திலிருந்து, வண்டிசோலை வழியாக தாவரவியல்‌ பூங்கா செல்லலாம். கூடலூரிலிருந்து ஊட்டி படகு இல்லம்‌ மற்றும்‌ கர்நாடகா பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள்‌ பிங்கர்‌ போஸ்டிலிருந்து காந்தல்‌ சென்று, முக்கோணம்‌ வழியாக படகு இல்ல சாலை மற்றும்‌ கர்நாடகா பூங்காவிற்கு செல்லலாம்.

குன்னூரில் இருந்து ஊட்டி வரும்‌ அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள்‌, வேன்‌ மற்றும்‌ மேக்சிகேப்‌ வாகனங்களும்‌ ஆவின்‌ வாகன நிறுத்துமிடத்தில்‌ நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள்‌ அரசு சுற்று பேருந்தை பயன்‌ படுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்குள் செல்லலாம். கோத்தகிரியில் இருந்து ஊட்டி வரும்‌ அனைத்து வாகனங்களும்‌ கட்டபெட்டு சந்திப்பில்‌ திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வர வேண்டும். அத்தியாவசிய வாகங்கள்‌ தவிர (பால்‌, பெட்ரோலியம்‌, சமையல்‌ எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும்‌ 31ம் தேதி வரை காலை 6 மணி முதல்‌ இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள்‌ அனுமதி இல்லை.

மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும்‌ இலகு ரக வாகனங்கள் (கார்கள், ஜீப்புகள்)‌ தலைகுந்தா‌, கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டிபன் சர்ச்‌ வந்தடையும்‌. அங்கிருந்து தாவரவியல்‌ பூங்கா செல்லும்‌ சுற்றுலா பயணிகள்‌ புதுமந்திலிருந்து, வண்டிசோலை வழியாக தாவரவியல்‌ பூங்கா செல்லலாம்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி