இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன பானை, சங்கு வளையல் தயாரிப்பு தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. நேற்று முன்தினம் 15வது குழியில் நடந்த அகழாய்வில் மெருகூட்டும் கற்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இந்த கற்கள் சங்கு வளையல் உள்ளிட்ட பொருட்களை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்’ என்றார்.