கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் விளையாட்டு தின விழா

திருப்போரூர்: கேளம்பாக்கம் பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் 33ம் ஆண்டு விளையாட்டு தினவிழா நேற்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தவர்ஷினி புகழேந்தி, இயக்குநர் ஸ்ரீதேவி புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் பியூலா பத்மாவதி வரவேற்றார். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், புட்பால், பாஸ்கட் பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில், 1800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சுதாஷா பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். அனைத்து போட்டிகளிலும் சிறப்பிடத்தை பெற்ற அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அலுவலர் பா.கந்தசாமி, கல்வி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் புலத்தலைவர் குருசாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குநர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்