ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் பாதிப்பு: டிராக்டர்களை மெதுவாக இயக்கி விவசாயிகள் போராட்டம்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் வறட்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தி உள்ளனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் கடந்த மாதம் பதிவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமல் போனதால் ஸ்பெயின் நாட்டில் உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் லீடா நகரில் திரண்டு டிராக்டர்களை மெதுவாக இயக்கி பேரணியாக சென்றனர். கோதுமை உட்பட வேளாண் உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டதால் ஸ்பெயின் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். கூடுதல் விலை, மானியம் வழங்கி உதவிட வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related posts

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி