குளத்தில் குளித்தபோது அக்கா, தங்கை, தம்பி பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(39). தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சந்தியா(13), கிருஷ்ணவேணி(10) என்ற மகள்களும், இசக்கிராஜா(8) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் பேரூரணியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முறையே 7ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் சந்தியா உள்பட 3 குழந்தைகளும் சித்தி சண்முககனி என்பவருடன் அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். சண்முககனி துணிகளை துவைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் குழந்தைகள் மூவரும் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் குளத்து நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்