இந்த நிலையில், தங்கராஜு சுப்பையா இன்று அதிகாலை சாங்கி சிறையில் தூக்கிலிடப்பட்டார். சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்தது. அதன்படி போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எடுத்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இந்த வழக்கில் தூக்கில் போட்டது குறிப்பிடத்தக்கது.