பழக்கடையில் தீ விபத்து

தொண்டி, ஏப்.20: கிழக்கு கடற்கரை சாலை தொண்டி அருகே பழகடையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பழங்கள் எரிந்து நாசம் தொண்டி போலீசார் விசாரணை நடத்தினர். தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் பன்னீருக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. மொத்த வியாபாரியான இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். பல ஆயிரம் மதிப்புள்ள பழங்கள்,காய்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை