தொண்டி, ஏப்.20: கிழக்கு கடற்கரை சாலை தொண்டி அருகே பழகடையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பழங்கள் எரிந்து நாசம் தொண்டி போலீசார் விசாரணை நடத்தினர். தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் பன்னீருக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. மொத்த வியாபாரியான இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். பல ஆயிரம் மதிப்புள்ள பழங்கள்,காய்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.