இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். 2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கினார். இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.

அதனைக் குறைக்க, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி. சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்!

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு