அதனைத் தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜை செய்து, மகா தீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில கல்லூரி முன்னாள் முதல்வர் பத்மினி, பாரத் மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெயலட்சுமி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தரணிதரன், விழுப்புரம் முன்னாள் டிஎஸ்பி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு, கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுசேரி, பெங்களுரு, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் ஆசிபெற்று சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.