தோட்ட நிர்வாகம் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய சம்பள பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், மாத சம்பளத்தை முறையாக அந்தந்த மாதத்தில் வழங்குவதோடு, தொழிலாளர்களுக்கான பண பயன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் மேலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.