சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடி, நகராட்சி நிர்வாக துறையில் ரூ.228 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் ரூ.38 கோடி என ரூ.500 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை பிப்ரவரி 15க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெண்டரை குறிப்பிட்ட காலத்தில் வெளியிட்டு சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.