நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் வழக்கு; 30 பேருக்கு காவல்துறை சம்மன்!

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார். இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ம் தேதி திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஜெயக்குமார் தனசிங் கடந்த 30ம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார். கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் உட்பட 30 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு காவல்துறை எஸ்.பி. சிலம்பரசன் சம்மன் அனுப்பியுள்ளார். ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Related posts

கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்: ஆர்.பி.உதயகுமார்!