சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது 2வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் நகலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை வழங்கினார்.