இட ஒதுக்கீடு கொள்கை வழிகாட்டுதல் 28ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: திருத்தி அமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை யு.ஜி.சி. வடிவமைத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துகளை, வரும் 28ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அனைத்து கல்வி நிறுவனங்களும் யு.ஜி.சி. தெர்வித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் மானிஷ் ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக மானியக்குழு உயர்கல்வியில் தரமான கல்வியை வழங்குவதற்காகவும், தரத்தை பேணுவதற்காகவும் அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பாக இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2006ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக்குழு, ‘சிறப்பு குழு’ ஒன்றை உருவாக்கி, நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை வடிவமைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துகளை, அனைத்து கல்வி நிறுவனங்களும் யு.ஜி.சி.யின் https://uamp.ugc.ac.in என்ற வலைதளத்தில் வருகிற 28ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு?: ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் தேர்தல் நிச்சயம்

வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை உலகம் முழுவதும் கண்காணிக்க செயற்கைகோள்; இஸ்ரோ தகவல்

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு