சீரணி அரங்கத்தை சீரமைக்க கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி நகரின் மையப் பகுதியில் சீரணி அரங்கம் உள்ளது. 50 ஆண்டுகளை கடந்த இந்த சீரணி அரங்கத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் பலர் கலந்து கொண்ட கட்சி கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கம்புணரி நகரில் திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தது.

சீரணி அரங்கம் சேதமடைந்து உள்ளதால் கட்சிக் கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை உள்ளது. அண்ணா மன்றம், பேருந்து நிலையம், உப்பு செட்டியார் தெரு உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சீரணி அரங்கை சீர் செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

சென்னை அரசு திரைப்பட நிறுவனம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!