டீ சர்ட்டில் தமிழக உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்ற வசனத்துடன் கூடிய,விஜயபாஸ்கர் படம் பொறிக்கப்பட்டு கரூர் மாவட்டம் எனவும் அச்சிடப்பட்ட டீசர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற நிலையில் தற்போது பிடிபட்ட வாகனத்தை கொண்டு வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெய்னர் லாரியில் உள்ள டீசர்ட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட கொண்டு செல்லப்பட்டதா அல்லது அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் லாரியானது திருப்பூரில் இருந்து டீ சர்டைகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்றதாகவும், லாரியில் ரூ.2,75,000 மதிப்பிலான 3000க்கும் மேற்பட்ட டீ சர்ட்கள் பறிமுதல் செய்தும் சம்பந்தபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம்தெரிவித்தார்.