கர்நாடகத்தில் அவர் பாத யாத்திரை மேற்கொண்ட பாதையில் அமைந்துள்ள 51 சட்டமன்ற தொகுதிகளில் 37ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கிற ஆட்சி மாற்றம் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள பாஜவை எதிர்க்கிற மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு ராகுல்காந்தி வரும் 21ம் தேதி காலை வருகை புரிகிறபோது, காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.