இப்பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால், சுமார் 200 ஏக்கரில் 90 நாள் சம்பா பயிர்களில் மழை நீர் தேங்கியது. அருகில் ஆறு ஓடுவதாலும், பள்ளமான இடத்தில் வயல் இருப்பதாலும் நீர் வடியவழியில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் அழுகி விட்டது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.