ஏற்கனவே 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினம் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாளான இன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருப்பதால் குடும்பத்துடன் மக்கள் தாடிப்பாறை அடிவாரம் என்ற இடமாகிய சதுரகிரி அடிவாரத்தில் குவிந்து தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். மலையேற அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் குடும்பமாக வந்து வனத்துறை அலுவலகம் முன் உள்ள கேட் முன்பு தீபம் கொளுத்தி, தேங்காய் உடைத்து தங்களுடைய நேர்த்தி கடனை வெளிப்படுத்தி பக்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் குடும்பமாக வந்து விடுமுறையை கழித்து வருகின்றனர்.