தமிழ்நாட்டின் உட்பகுதியில் வெப்ப அலை நிலவியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக வேலூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. திருவள்ளூர், பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 106 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இந்நிலையில், அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த பிப்பர்ஜாய் புயல் நேற்று காலையில் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்தது. இன்றும் அதே திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.