ராகுல் எம்பி பதவி பறிப்பு காங்கிரஸ் கண்டன போராட்டம்

சிவகங்கை, ஏப்.19: சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அப்துல்சித்திக் தலைமை வகித்தார்.காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுபோல் காளையார்கோவில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு வட்டாரத்தின் சார்பாக ராகுல்காந்தி எம்பி பறிப்பை கண்டித்து காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே கண்டன கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன் மற்றும் பல நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர் அணியினர், மகளிர்
பிரிவினர் கலந்துகொண்டனர்.

Related posts

வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்

வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி