இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும் கூட, அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்று நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் 2006ம் ஆண்டு ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பில், தனது தேசியத்தை இங்கிலாந்து என்று குறிப்பிட்டார். அதனால் இங்கிலாந்து குடிமகனாக இருக்கும் ஒருவர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.