புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கிய நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து கலால்துறை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கிய நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. நிர்மல் – ஆர்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் மதுபாட்டில் வழங்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூலத்துடன் குவார்ட்டர் மது பாட்டிலும் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர்.

இதனால் திருமணத்துக்கு வந்தவர்களில் சிலர் முகம் சுழித்தாலும், மது பிரியர்கள் பலர் புளகாங்கிதம் அடைந்தனர். சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர்.

அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவார்ட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். இது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கிய நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி