கருணை ஓய்வூதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் பணிபுரிந்து ஓய்வு பெற்று உயிருடன் உள்ள மற்றும் தற்போது பணிபுரியும் ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும் அதனையும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், இதுதவிர ரேஷன் கடைகளில் பெரும்பாலும் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதையொட்டி கடைகளில் கழிவறை வசதி இல்லாத நிலையில் பணியாளர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும் எனவும் இக்கடிதம் வாயிலாக கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.