அடுத்த ஆண்டு தாம் இந்தியா வர உள்ளதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க்,” நான் மோடியின் ரசிகன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியானதை செய்ய விரும்புகிறார். அவர் எப்போதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்க் இணைப்பானது தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்,’என்றார்.