இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்த தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சேர்க்க கோரி கேத்ரின் மார்டின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், எனக்கு தெரியாமலேயே என் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டது சட்டவிரோதமனது. மேலும், வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயரை சேர்க்க கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், தற்போது தபால் வாக்குகள் தொடங்கி விட்டதால் இனி பெயரை சேர்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கேத்ரின் மார்டின் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.