போன் பேசியபடி தண்டவாளம் அருகே நின்றதால் விபரீதம்: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மீனவர் பலி

காஞ்சிபுரம்: செல்போனில் பேசியபடி தண்டவாளம் அருகே நின்றிருந்த மீனவர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், பாட்டைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (38). மீனவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் பாஸ்கரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே செல்ேபானை எடுத்து பேசி கொண்டே, அருகில் உள்ள தண்டவாளம் அருகே நின்றிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில், பாஸ்கர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்