அவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்சார கம்பிகளின் மூலம் செல்கிறது. இந்த கம்பிகள் வயல் வெளிகளில் மிகவும் தாழ்வாக செல்கிறது.
இதனால் விவசாயிகள் நாற்று நடவும், ஏர் உழவவும் வயலுக்கு செல்லும்போது எந்த நேரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து விடுமோ அச்சத்துடன் தான் வேலை செய்ய செல்கிறார்கள். மின் கம்பிகளை மாற்றாமல் மின்வாரியத்தினர் அலட்சியமாகவே உள்ளனர். எனவே பழைய மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.