தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு விமான கோபுரத்துக்கும், அதைத்தொடர்ந்து மூலவர், பரிகார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.