இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 21 பேரில் 4 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பிஎம் மன்னன் உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.