வாக்காளர்கள் வரிசையில் நின்று செல்ல ஏதுவாக தடுப்புகள் அமைப்பு, சாமியானா பந்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாற்று திறனாளிகளை வாக்குப்பதிவு அறைக்கு அழைத்து செல்ல சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குக் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டுவர துப்பாக்கி ஏந்திய போலீசார், வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. பணிகள் நிறைவடையாத ஒரு சில வாக்குச் சாவடிகளில் மாலைக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.