ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். ராம் சிங் வெண்கலம் வென்றுள்ளார். அதே போல F51 கிளாப் எரிதலில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களையும் வென்றுள்ளனர். பிரணவ் குமார் தங்கம் வென்றார். தராம்பிர் வெள்ளி பதக்கம் வென்றார், அமித் குமார் வெண்கலம் வென்றார். அடுத்து, குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மோனு கங்காஸ் வெண்கலம் வென்றார். படகு போட்டியில் பிராய்ச்சி யாதவ் வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.