இந்நிலையில் சிறுமி சரண்யா அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரின் காரின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கனகா, மகளை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது காரில் மயங்கிய நிலையில் சரண்யா கிடந்தது தெரியவந்தது.
உடனே சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.