திடீரென கூட்டத்தில் இருந்த அதிமுகவை சேர்ந்த ஒரு தொண்டர், ‘எடப்பாடி, வாழ்க வாழ்க’ என கோஷமிட்டபடி எடப்பாடி வாகனத்தின் அருகே சென்றார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அவரது கன்னத்தில் ‘பளார்’ என அறைவிட்டு இழுத்து ஓரமாக தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொண்டர் நிலைகுலைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.