வேலை இல்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. 100 சதவீத வளமும் செல்வமும் நிறைந்த இந்தியாவில் 10 சதவீதம் தான் மக்கள் அனுபவிக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாமல் ஒன்றிய அரசு திணறுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி கூறுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும். சாத்தியமில்லாத ஒன்றை பாஜக அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு இந்திய குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.