லாரி மோதி முதியவர் பலி

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (83) இவர் நேற்று காலை, புழலில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார். புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற மினி லாரி, இவர் மீது மோதியது. இதில், பெருமாள் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஆவடி அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் மணியை (61) கைது செய்தனர்.

Related posts

மம்தா பற்றி அவதூறு: பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு நோட்டீஸ்

ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்கு: நள்ளிரவில் சுவாதிக்கு மருத்துவ சோதனை

பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு