உயிருக்கு போராடிய மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய விருதுநகர் எஸ்பி

 

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக விருதுநகர் மாவட்ட எஸ்பி னிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை விருதுநகரில் இருந்து திருவில்லிபுத்தூர் வந்த எஸ்பி னிவாச பெருமாள் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு உதவிக்காக பெண் காவலர் ஒருவரை நியமித்தார். இதுகுறித்து எஸ்பி சீனிவாச பெருமாளிடம் கேட்டபோது, தகவல் கிடைத்து மூதாட்டியை பார்க்க வந்தேன். சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று உடல் நலம் தேறியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி பற்றி தகவல் கிடைத்தவுடன் உடனே மீட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த எஸ்பியை பொதுமக்கள் பாராட்டினர்.

Related posts

மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்

மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை

கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்