செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி

திருப்பூர்: செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் அந்த வகையில் திருப்பூர் பூலுவாம்பட்டி பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மூதாட்டி ஒருவர் தூய்மை பணியில் ஈடுபடும் நிலையில் பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியில் ஈடுபடும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் பூலுவாம்பட்டி ரிங் ரோடு பகுதியில் தங்கவேல் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக ஜெயக்கொடி என்ற மூதாட்டி பணியாற்றி வருகிறார்.

தினமும் காலையில் நிறுவனத்தின் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அவர் வழக்கமாக தனது பணியை துவக்குவதற்கு முன்பாக வாயிலில் தொட்டு வணங்கி மரியாதை செய்து பின்னர் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார் .இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை நிறுவன உரிமையாளர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொழில் மீதும் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீதும் ஒரு பணியாளர் எந்த அளவுக்கு பக்தி உடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த செயல் உணர்த்துவதாகவும், எந்த வேலை என்றாலும் அதில் உண்மையாக செயல்பட வேண்டும் என்பதை ஜெயக்கொடியின் செயல் உதாரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்