தினமும் காலையில் நிறுவனத்தின் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அவர் வழக்கமாக தனது பணியை துவக்குவதற்கு முன்பாக வாயிலில் தொட்டு வணங்கி மரியாதை செய்து பின்னர் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார் .இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை நிறுவன உரிமையாளர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொழில் மீதும் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீதும் ஒரு பணியாளர் எந்த அளவுக்கு பக்தி உடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த செயல் உணர்த்துவதாகவும், எந்த வேலை என்றாலும் அதில் உண்மையாக செயல்பட வேண்டும் என்பதை ஜெயக்கொடியின் செயல் உதாரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.