குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது வேட்பாளர்கள் தங்களது மனுக்களை எல்லாம் திரும்ப பெற்றுக் கொண்டு பாஜகவை சேர்ந்த ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது மிகப்பெரிய கேலிக்கூத்து. காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் மனுவில், கையெழுத்து தவறாக உள்ளது என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. மக்களை சந்தித்து தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவிற்கு அச்சம் உள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்தநிலையில் எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் மக்கள் பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்து எம்எல்ஏக்களின் அலுவலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.