காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது என்றும், கறி கஞ்சி கிடைக்காததால் கைகலப்பில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு என்றும் பேனரில் நண்பர்களின் புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மணப்பெண் தேவை என்று நான்கு 2கே கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம் வயது படிப்பு பதிவிட்டு தொழில் வி.ஐ.பி (வேலையில்லா பட்டதாரி) அடுத்த மாப்பிள்ளை நாங்க! பொண்ணு இருந்தா தாங்க! என அச்சிட்டிருந்தனர். 90 கிட்ஸ் பெண்கள் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது 2கே கிட்ஸ்களும் பெண்கள் கேட்டு பேனர் வைத்தது அப்பகுதியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.