கேஷியரை தாக்கிய ரவுடிக்கு வலை

 

சேலம், ஜூலை 25: சேலம் புதிய பஸ் நிலையம் அருகில், தனியார் ஓட்டலில் பார் இயங்கி வருகிறது. இங்கு சொர்ணபுரியை சேர்ந்த ராஜூ(35) கேஷியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ரவுடியான வண்டிப் பேட்டையை சேர்ந்த ஹரிதாஸ்(35) உள்பட 3 பேர், அங்கு மது குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவருக்கு மது சப்ளை செய்யவில்லை. வழக்கமாக குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்வதால், மது வழங்க மறுத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த ஹரிதாஸ், கேஷியர் ராஜூவை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவுடி ஹரிதாஸ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

 

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை