ஆனால், எந்த நடவடிக்கையுறம் எடுக்கவில்லை. வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமெனாறு தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் தலைமை நீதிபதி முன்பு நேற்று முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்று விசாரிப்பதாக தெரிவித்தது.