ஆனால் அதற்கு போதுமான இடம் இல்லாமல் இருந்த நிலையில் அதனை அறிந்த இஸ்லாமியர்கள் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை இந்து சகோதரர்களுக்கு தானமாக வழங்கினர். அந்த இடத்தில் முறைப்படி விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழாவும் விமரிசையாக நடைபெற்றது. அப்போது இஸ்லாமியர்கள் 7 தட்டுகளில் சீர்வரிசை சுமந்து வந்து வழங்கி குடமுழுக்கில் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கியது மதநல்லிணக்கத்தை எடுத்துஉரைப்பதாக அமைந்தது.