இதில் தூத்துக்குடி உதவி ஆணையாளர் செல்வி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் 2 கோடியே 49 லட்சத்து 44 ஆயிரத்து 699 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது. மேலும் 1 கிலோ 100 கிராம் தங்கம், 24 கிலோ வெள்ளி, 326 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.