இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, வரும் 9,10 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயம், மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அந்த பந்தயத்தை வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பந்தயத்தை நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டது என்று கூறி பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.