10வது நாளான நேற்று மாலை கிராம எல்லையில் இருந்து திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக தீ மிதிக்கும் இடத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் 274 பேர் அம்மனுடன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது குழுமியிருந்த பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
இன்று அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னங்காரணி, மேட்டுக்கண்டிகை, பள்ள கண்டிகை மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏ ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.