மேல்மருவத்தூர் அருகே ரயில்வே கேட்டில் லாரி மோதல்; தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் லாரி மோதி சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் நேற்று முன்தினம் இரவு ரயில் செல்வதற்காக மூடப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியை வந்த லாரி ஒன்று மூடப்பட்டிருந்த கேட் மீது மோதியது. இதனால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வழியை செல்லும் ஜோத்பூர் ஜிஷீ நாகர்கோவில் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் விரைவு ரயில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய ராமேஸ்வரம் விரைவு ரயில், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் அருகே நிறுத்தப்பட்டன. பின்னர் சிக்னல் பழுது செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன. ரயில் தாமதம் காரணமாக, பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது