மழை பெய்தால் ஓரளவுக்கு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும். மழை பெய்யவில்லை என்றால் தண்ணீருக்கு மக்கள் சிரமப்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு, மாநிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும், பொது மக்களின் குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதவிர, ஆங்காங்கே உள்ள கிணறுகளை தூர்வாருதல், கைப்பம்புகளை அமைத்தல், ஏற்கனவே தண்ணீர் வராத கைப்பம்புகளை சரிசெய்தல், நீர்த்தொட்டிகளை அமைத்தல், குடிநீர் குழாய்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும். அதேபோல், தண்ணீரை சிக்கனமாக தேவைக்கு ஏற்ப பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.